Friday, May 27, 2011

மா மு க - விழிப்புணர்வு பேரணி !


மாணவ முன்னேற்ற கழகம்- விழிப்புணர்வு பேரணி !

வணக்கத்துக்கும்,மரியாதைக்குமுரிய,அன்பார்ந்த,பேரன்பு கொண்ட, பெருமதிப்பிற்குரிய , இன்னும் எல்லாவற்றுக்கும் உரிய  பெரியோர்களே, தாய்மார்களே , குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தம்பி தங்கச்சிகளை பெற்றெடுத்த முத்துக்களே ! எங்கள் சொத்துக்களே! இன்னும் அவர்களுக்கு உறவுகளாய் - அண்ணன்கலாய், அக்காள்கலாய், அத்தான்களாய் , அத்தாச்சிகளாய் இருக்கின்ற மணிகளே ! உங்கள் முன்னால் எங்கள் கழகம் ஒரு முக்கிய வேண்டுகோளினை வைக்கிறது !

எத்தனையோ இடையூறுகளையும் , இம்சைகளையும் தாண்டி வெற்றிகரமாக தேர்வுகளை துணிச்சலோடும், அஞ்சா நெஞ்சோடும் களமாடி முடிவுக்காக காத்திருக்கும் வீரர்களில் சிலர் வீரப்புண் படுவது போர்க்களத்தில் நிகழ கூடிய ஒன்றுதான் என்பதனை நினைவில் கூறுங்கள் ! ஆகவே மக்களே எங்கள் வாகனத்தின் பின் இணைக்கப்பட்டுள்ள ட்ராக்டர் டிப்பரில் தாங்கள் தயாராய் வைத்திருக்கும் அரிவாள் , கத்தி , கடப்பாரை போன்ற கனரக ஆயுதங்களையும் திட்டுவதற்கு தயாராய் வைத்திருக்கும் வார்த்தைகளை எங்கள் கழக கண்மணிகள் தருகின்ற குளிர்ந்த இதமான மோரோடு சேர்த்து விழுங்கி விடுங்கள் என்பதனை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம் !

அதையும் மீறி , ஆயுதங்களை ஒளித்து வைக்க நினைத்தால் ... இதோ பாருங்கள் இந்த பைலிலே ஊரில் உள்ள எல்லோருடைய பெயிலாப்போன  மதிப்பெண் சான்றிதள்களும் இருக்கின்றன , அவைகளை நோட்டீசு அடித்து சம்மந்தப்பட்டவர் வீட்டு சுவரிலே ஒட்டுவோம். அந்த காலத்திலேயே நான் பர்ஸ்ட் மார்க் என பந்தா அடித்து தம்பி தங்கைகளை நோக அடிப்பவர்கள் உளவு 
படையால் வேவு பார்க்கப்பட்டு , வலுக்கட்டாயமாக வர இருக்கும் ஜூன் 29 ல் 
நடைபெற உள்ள உடனடி தேர்வில் அமர்த்த படுவார்கள். வருங்காலத்தில் புது புது வழிகளையும், புதுமைகளையும் செய்ய போகிற, குறிப்பாக சொந்த புத்தியில் வாழப்போகிற  எங்கள் வீரப்புண் பட்ட வீரர்களும், வீராங்கனைக்களுமே முக்கியம் ! முக்கியம் !

நாங்கள் அதிக மார்க் எடுக்கும் அறிவு ஜீவிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களை வைத்து எங்கள் அதி புத்திசாலிகளை எடை போடுவதைத்தான் வன்மையாக கண்டிக்கிறோம். இருபது , இருப்பத்து ஐந்து ஆண்டுகள் வெறும் பாடப்புத்தகங்களை படித்து விட்டு , பெயருக்கு பின்னால் முழ நீள பட்டங்களை போட்டு பயமுறுத்தினாலும் , இறுதியாக வாழ்கையை கற்க, அதன் ஏற்ற இறக்கங்களில் சறுக்கி விளையாடிட எங்கு வர வேண்டும் தெரியுமா ? இன்றைக்கே விழுவதையும் எழுவதையும் பழகி கொண்ட எங்கள் வீரக் கண்மணிகளிடம் , ஏதோ சில காரணங்களால் இன்றைக்கு  தோற்றுப்போன நாளைய நட்சந்திரங்களுக்கு பின்னால் ஓடத்தான் போகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் !

வறுமையை எதிர்த்து போராடி , தேர்விலே வளமாக தேறி , அடக்கமாக இருக்கும் தம்பி தங்கைகள் ஆண்டுதோறும் பெருகி கொண்டு இருப்பது உள்ளத்திற்கு களிப்பு ஊட்டுகின்ற செய்தியாம். அவர்களுக்கு செய்ய முடிந்த எல்லாவித உதவிகளையும் செய்வோம் என்பதனை கூறிக் கொண்டு , , , 

நம்முடைய சுற்றுலா துறையை பெருமைக்குரிய இடத்திற்கு கொண்டு சென்றுள்ள முனைவர் , வெ. இறையன்பு IAS, மக்கள் பணியோடு , இலக்கிய பணியும் செய்கிற , இன்னமும் நிறைய விசயங்களை தேடிக்கொண்டு இருக்கிற அவர்களை பேச அழைக்கிறேன். வெகு ஆண்டுகளுக்கு முன்னரே இவர் எழுதிவிட்ட ஏழாம் அறிவு , ஐ ஏ எஸ் , ஓடும் நதியின் ஓசை போன்ற அய்யாவின் புத்தகங்கள் மாடிக்கடை முச்சந்தியில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் கிடைக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம் !

அய்யா அவர்களுக்கு , கட்சியின் இளைஞர் பாசறை தலைவர் திலீபன் அவர்கள் மலர் செண்டும் , செயலர் முருகானந்தம் அவர்கள் பொன்னாடை போர்த்தியும் கவுரவிப்பார்கள் ! (விசிலும் , கைதட்டல்களும் ...)




 (தானாக தொடர்ந்து மூன்று காணொளிகள் தொடரும். இல்லை என்றால்,
 விளிம்புகளில் தெரியும் அம்பு குறியை சொடுக்கவும் )

இந்த புத்தகங்கள் இன்னும் மின் பதிப்பாக வெளிவரவில்லை,வந்தால் இணைப்பு கொடுக்கப்படும். இணைய வர்த்தகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் படத்தை சொடுக்கவும்!


ஓயாத கழகப் பணியில் ,
பிரேம் சத்யா , ச .ம .உ  


No comments: