Saturday, December 25, 2010

சின்ன குருவி போடும் "வாழ்க்கை" அரிசி

சின்ன குருவிகளின் வாழ்க்கை கூட
நமக்கு சிலநேரம் தன்னம்பிக்கை
வளர்க்கும் ! - அதற்கு இந்த பாடல்
மிக சிறந்த உதாரணம் !

(மூலம் : தவமாய் தவமிருந்து தமிழ் திரைப்படம்.
கீழே ஓடி கொண்டிருக்கும் பாடல் வரிகளை
நிறுத்தி படிக்க - சுட்டெலி புள்ளியை வரிகளின்
மீது நிறுத்துங்கள் !)




அந்த உருண்டை மலை ஓரத்துல
உருண்டை மலை ஓரத்துல
உருண்டை மலை ஓரத்துல - நான்
உளுந்து காய போட்டுருந்தேன் ..தேன்... ன்!
அந்த உளுந்த உருட்டி அள்ளும் முன்னே
அந்த உளுந்த உருட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாள சீமையிலே
இன்னைக்கு உறுமி சத்தந்தான்
கேட்டதென்ன ...?

ஏ ...... "ஆ"க்காட்டி "ஆ"க்காட்டி
எங்கெங்கே முட்டை இட்ட ?
எங்கெங்கே முட்டை இட்ட ?
எங்கெங்கே முட்டை இட்ட ?

குருவி :
நான் கல்லை தொளைச்சு
கரு மலையில் முட்டை இட்டேன் !
கரு மலையில் முட்டை இட்டேன் !
கரு மலையில் முட்டை இட்டேன் !

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு !
அய்யா ! - நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு !

அந்த மூணு குஞ்சுல - மூத்த
குஞ்சுக்கு இரை தேடி மூணு மலை
சுத்தி வந்தேன் ! - நடு
குஞ்சுக்கு இரை தேடி நாலு மலை
சுத்தி வந்தேன் !

இளைய குஞ்சுக்கு இரை தேட
போகையிலே போகையிலே
போகையிலே ... லே !
என்ன கானாங்குரத்தி மகன்
அய்யா ! - என்ன கானாங்.....ங் ......
குரத்தி மகன் - கண்டிருந்து
கன்னி போட்டான்
என்ன கானாங்குரத்தி மகன்
கண்டிருந்து கன்னி போட்டான் !

என் காலு ரெண்டும் கன்னிக்குள்ளே
ரெக்கை ரெண்டும் மாரடிக்க
ரெக்கை ரெண்டும் மாரடிக்க
ரெக்கை ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா - நான்
அழுத கண்ணீரு ஆறா பெருகி
ஆனை குளிப்பாட்ட - குளமா
பெருகி குதிரை குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான் பெத்த.....அ ... மக்கா
நான் பெத்த மக்கா -உங்கள
பாதியில விட்டு - நான் இப்போ
பரலோகம் போறேனே
போறேனே போறேனே !

ஏழ குருவியே நீ ஏங்கி அழ கூடாது !
கத்தும் குருவியே நீ கதறி அழ கூடாது !
ஏழ குருவியே நீ ஏங்கி அழ கூடாது !
கத்தும் குருவியே நீ கதறி அழ கூடாது !
வலை என்ன பெருங்கனமா ?
அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா !
வலை என்ன பெருங்கனமா ?
அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா !

சின்ன குருவியே நீ சிணுக்கி அழ கூடாது
நொய் குருவியே நீ நொந்து அழ கூடாது !
சின்ன குருவியே நீ சிணுக்கி அழ கூடாது
நொய் குருவியே நீ நொந்து அழ கூடாது !
அலகெனும் அரிவாளால் - இந்த
வலையினை அறுத் தெரிவோம்
அலகெனும் அரிவாளால் - இந்த
வலையினை அறுத் தெரிவோம்

வலியும் வேதனையும் வலையோடு
போயிடுச்சு - வாழ்க்கை என்னான்னு
போராடி தெருஞ்சிருச்சு !
வலியும் வேதனையும் வலையோடு
போயிடுச்சு - வாழ்க்கை என்னான்னு
போராடி தெருஞ்சிருச்சு !

வாங்க பறந்திடுவோம் - என்
குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் !
வாங்க பறந்திடுவோம் - என்
குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் !




Thursday, December 23, 2010

நுண்ணறிவு சோதனை - படகோட்டி காட்டுங்கள்




விதி முறைகள் :(விளையாட்டை தொடங்க நீல வண்ண வட்ட  பொத்தானை அழுத்தவும் )
௧. படகு இரண்டு பேரை மட்டுமே சுமக்கும் !
௨. தந்தையால்  , தாய் இல்லாமல் மகள்களோடு இருக்க முடியாது 
௩. தாயால் , தந்தை இல்லாமல் மகன்களோடு இருக்க முடியாது 
௪. காவலர் இல்லாமல் திருடனால் குடும்பத்தினரோடு இருக்க முடியாது 
௫. தாய் , தந்தை , காவலர் இவர்களுக்கே படகை செலுத்தத் தெரியும் 

யாரை படகில் ஏற்ற நினைக்கிறீர்களோ அவர்கள் மீது சுட்டெலி கொண்டு 
இடது அழுத்தம் கொடுத்தால் போதும் ! படகை செலுத்த எதிர்முனையில் 


உள்ள சிவப்பு உருண்டை பொருத்தப்பட்ட குச்சியினை அழுத்தவும் !

Here are the rules:
1. The raft can carry only 2 people.
2. The father can not be left with any of the daughters unless the mother is present
3. The mother can not be left with any of the sons unless the father is present.
4. The criminal can not stay with any family member unless the guard is present.
5. Only the father, mother, and guard know how to use the raft.
Click on the characters to move them on/off raft. Click the red control ball to send the raft across the river.
(I got this game through one of my NIT-Trichy friends via email. Later I solved it. Today while
surfing flash and Active X games I came across this again.)

For Answers and More puzzles (There You can have a look at my answers too!)

Monday, December 20, 2010

அம்மா - அன்பின் அடையாளம்

கடவுள் பற்றி ஆயிரம் சர்ச்சைகளும்
குழப்பங்களும் , சண்டைகளும்
காலங்காலமாய் நிகழ்ந்த வண்ணம்
இருந்தாலும் - அன்னையின்
கடவுள் தன்மை பற்றி - அவள்
அன்பின் புனிதம் பற்றி
அணு அளவு சந்தேகம் - உலகின்
எந்த மூலையிலும் எழப்போவதில்லை !

முற்றும் துறந்த முனிவன் கூட - தாயின் தேகம் 
பற்றி எரியபோவதை தாங்க இயலாது 
கண்ணீர் விட்ட உண்மை  கதை உண்டு !
சமீபத்தில் நிகந்த - எனை மிகவும் 
பாதித்த மரணம் - எனக்குள் 
வார்த்தைகள் இல்லை ! - இடைவிடாது 
ஏதாவது சிந்திக்கும் மனசு கூட 
எனக்காக - நான் துயர் மீள 
வேண்டும் என 
மௌனம் கொண்டு நிற்கிறது !
தாய் குருவி ,திரும்பாத ஊர் 
போய்விட்ட நிலையில் - துடிக்கும் 
இந்த பிள்ளை குருவிகள் 
மன சாந்தி கொள்ளட்டும் !

திடீரென வந்து நம் வாழ்வை 
திருடி கொண்டு போகும் 
மரணத்தின் பிடியில் - நாமும் 
தப்பிவிட போவதில்லை ! 
இனி நேரம் ஓட்டி விளையாடி 
பொன்னான வாழ்வதனை 
வீண் செய்யும் போக்கு - நம் 
நினைவிலிருந்தே அழியட்டும் !

கணப்பொழுதில் கனவாய் 
மறைந்து - என் நிஜங்களில் 
ஏற்றுக் கொள்ள முடியாததாய் 
போய்விட்ட -உங்கள் 
இனிய வாழ்வு - என் இதயத்தில் 
புகை மூட்டி - கண்களில் நீர் வார்பதால் 
உங்களுக்கு இரங்கற்பா பாட முடியாது 
இந்த பாவியால் ...
என்றேனும் நான் ஏற்று கொள்கிற 
துணிச்சல் வரும் போது - உங்களை 
போற்றி என்னை புனித படுத்தி கொள்வேன் !
இந்த பாடல்கள் - உடல் துறந்து 
அமரத்துவம் எய்திய அந்த 
ஆன்மாவிற்கு சமர்ப்பணம் ...!






























Thursday, December 16, 2010

எளிமை ! இனிமை ! ஒருமை!

வாழ்வின் உன்னதம்




காபி வித் அணு - சத்குரு ஜகி வாசுதேவ்
பகுதி 1

பகுதி 2


பகுதி 3


பகுதி 4


பகுதி 5


பகுதி 6

Monday, December 13, 2010

இங்கே நானும் நீ கொடுத்த தனிமையும் சுகம்!


நான் புறப்படும் போது
உனக்கு பதிலாய் - எனக்கு
துணையாய் நீ அனுப்பி
வைத்த தனிமை
உன்னை போல் - என்னிடத்தில்
அக்கறை காட்டுவது
இல்லையடி !

ரகசியமாய் இது பற்றி
புகார்களை ஒப்புவிக்க
அழகு மாவிலை தொங்கல்
மின்னும் உன் தங்க
காதுகள் அருகில் இல்லையடி!

என் உயிர் வளர - என்
ஆழத்து வேர்களில் - உன்
உயிர் ஊற்றி வந்தாய் !
வாட நினைத்த போதெல்லாம்
வாடாத மலர் முகம்
காட்டி மலர்ச்சி கொடுத்தாய் !
இந்த தனிமை...
ஆழ குழி பறித்து - என்
மொத்த நீரையும் உறிஞ்சி
அங்கே பாய்ச்சி கொள்கிறது !
மலர்ந்து இதழ்கள்
விரியும் போதெல்லாம் - எங்கோ
போய்க் கொண்டிருந்த
பெருங்காற்றை என் பக்கம்
திருப்பி விடுகிறது !

இரவு போர்வை போர்த்தி
அமைதி கொள்ளும் - வண்ண
பூமியாய் தூங்கி வந்தேன் - நீ
"இனிய இரவு" குறுஞ்செய்திகள்
அனுப்பிய அந்த நாட்களில் !
இன்று .......
நடு நிசி கடந்த பின்னும் - மூட
நினைத்திடும் விழிகளை
திறந்து பார்த்து விளையாடுகிறது
நீ அனுப்பி வைத்த தனிமை !

உன் நேரத்தை எனக்காய்
செலவிட்டவள் நீ - எனக்கான
என் நேரத்தை கொஞ்சமாவது
இந்த தனிமை மிச்சம்
வைத்தால் போதுமடி !

காதலில் முன் அனுபவம்
கொண்டவன் இவன் என்றும்
உன்னை கூட நாளை இவன்
ஏமாற்ற கூடும் என்றும்
உண்மையான அக்கறை
மொழிகள் கேட்ட பின்னும்
ஏனோ நீ உதற மறுத்தாய் !
வேரோடு பிடுங்க பட்ட
இடத்தின் வேதனைதான்
உணர்ந்தாயோ ?!- இங்கு பாரடி
கூடவே இருந்தும் - இந்த
தனிமை ஒவ்வொரு
நொடியும் தனியனாக - எனை
உதறி கொண்டிருக்கிறது !

மெரீனா கடற்கரையில்
தனிமையோடு - தனியாக
நான் அமர்திருந்தும்
காதலர்களாக எங்களை
சந்தேகித்து இருக்காது
இந்த உலகம் ! - நானும்
நீயும் ஓர் நாள் கூட
அந்த காதல் கடல் காற்று
வாங்கியதில்லையே ! - நம்மை
காதலர்களாக ஏற்று கொள்ளுமா
இந்த உலகம் !

என்னை யார் வேடிக்கை
பேசினாலும் பொறுக்க மாட்டாய் !
நான் உன்னை வேடிக்கை
பேசினாலும் விரும்ப மாட்டாய் !
எந்த நேரமும் ஓயாது - எனை
வேடிக்கை பேசும் - இந்த
தனிமையினை கொஞ்சம்
வாய் மூடி இருக்க சொல்லடி !

கணவன் மனைவியாய்
வாழ்ந்து பார்த்து
அவசர படவில்லையடி நாம் !
குடும்ப வரவு செலவுகள்
நிர்வாகம் என - அதீத
அவசர பட்டவள் நீயடி !
ஓடும் இந்த வாழ்க்கைக்கு-என்
கால்களில் சக்கரம்
கட்டிவிட்டவள் - வழித்துணையாய்
அனுப்பி வைத்த தனிமை
என் பாதைகளில் கற்கள்
கொட்டி போவதை என்னவென்று
சொல்வதடி !

இப்போதும் பாரடி - நேரம்
போவது தெரியாமல் உனை
பற்றி எழுதி கொண்டே இருக்கிறேன் !
எல்லோரும் பொய் விட்ட
கணிணி ஆய்வு கூடத்தில்
நான் தனியாக இருப்பதாக
இந்த தனிமை உரக்க கத்துகிறது!
இன்னும் கொஞ்ச நேரம் போனால்
பசியை துணைக்கு அழைத்து
பத்து காதை நடை பயணத்தில்
பாதியிலே எனை வீழ்த்தி விடும் !

உன் செல்ல கோபங்களின்
அம்சமோ இந்த தனிமை !
இவ்வளவு நேரம் விடாது
திட்டியும் - என்னோடு
என் அறைக்கான பயணத்திற்கு
தயாராய் நிற்கிறது !

   - இந்த கடும் உறைபனியிலும்
     உனக்காக உருகி கொண்டிருக்கும்
     உன்னவன் !

Sunday, December 12, 2010

ரஜினி - என்றுமே ராஜா நீ !



சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
தமிழ் திரை உலகத்தின் முக்கியமான
 நட்சத்திரம் !என் குழந்தை பருவத்தில்
 நான் ரசித்ததில்லை இவரை 
இப்போது - நானும் எல்லோரையும் போல
இந்த காந்தத்தின் வட்டத்துக்குள் இருக்கிறேன் !
நடிப்பை மீறிய அவருக்குள் 
இருக்கிற மந்திர பொறிகள் - நெருப்பு விழிகள் - 
எல்லாவற்றுக்கும் மேலாக 
எளிமையின் சின்னமாக - யதார்த்தத்தின் 
அடையாளமாக விளங்குவதை 
மெச்சாமல் இருக்க முடியோமோ?
வெள்ளித்திரையை வெறும் 
வியாபாரமாக கருதாது 
தனக்கான பள்ளிக்கூடமாகவும் 
ஞானம் போதிக்கும் குருவாகவும் 
எண்ணுவதாலும் ,மிக முக்கியமாக 
தன் ரசிகர்களை எப்போதும் நெஞ்சில் 
நிருத்தியவராக இருப்பதாலும் 
இன்றும் அவரால் வெல்ல முடிகிறது !
ஹிந்தி திரை உலகம் நம்மை ஏளனமாய் 
அவ்வபோது பார்பதுண்டு - இன்று 
இந்த ரஜினியால் வாய் அடைத்து 
கொண்டு நிற்கிறது ! 

வாழ்வியலின் சாதகமில்லாத 
நிகழ்வுகள் - நம் நியாயம் பழிக்கப்படும் 
போது எழ நினைத்து - அடங்கி 
கொண்ட கோபங்கள் - பழி வாங்கும் 
உணர்வுகள் - கவலைகள் - இன்னும் சில
எதிர்மறை காரணிகள் தலைவர் ரஜினி 
ரசிகர்களிடம் கொஞ்சம் அல்ல நிறைய 
குறைவுதான் ! - நம் எல்லோருக்கும் சேர்த்து 
எல்லாவற்றையும் தன் திரை படங்களில் 
செய்து விடுவார் ! - ரஜினி படம் என்னை 
பொறுத்த வரை ஒரு ரகசிய 
உளவியல் சிகிச்சை !
சாத்திய கூறுகளை மறந்து விட்டு 
முழுதாய் ரஜினி படத்தை மகிச்சியோடு
 பார்த்தவன் -தான் தேக்கி 
வைத்திருந்த எதிர்மறை 
ரசாயன குழம்புகளை திரையரங்கத்தில் 
வடித்து விடுகிறான் ! - உலகம் 
ஆயிரம் குறைகள் சொல்லட்டும் 
உலகத்தரம் முத்திரை போடுபவர்கள் 
முகத்தை மூடிக் கொள்ளட்டும் 
நாம் நல்லதோர் தமிழனாய் 
இவரை ஆதரிப்போம் ! 
புத்திசாலித்தனத்தின் உச்சத்தில் 
இருப்பவரா நீங்கள் 
சரி ! தவித்து விடுங்கள் ! - அதற்காக 
ரஜினி உதவி தேவை படுகிற 
எங்களை போன்ற எளியோரை 
பரிகசிக்காதீர்கள் ! விஞ்ஞானத்தையும் 
மெய்ஞ்ஞானத்தையும் 
கூட்டி ரஜினியோடு சமன் 
செய்து கொள்பவர்கள் 
நாங்கள் ! - ஐன்ஸ்டீனை 
ஆண்டு கணக்கில் 
படித்து மூளை கொழுத்து 
யாருக்கும் உதவி 
இன்றி மடிந்தவர்கள் நிறைய உண்டு !
தலைவர் ரஜினி ரசிகனாய் இருந்து 
இதயம் கனியாது 
இருப்பர்வர் யாரும் இல்லை !


வாழ்க நின் புகழ் ! 

***** கொசுறு ***********************************
I had seen following comments somewhere in the facebook:

1. Do you know email id of google?
    It is : gmail@rajnikanth.com
2. Are you afraid of apocalypse(world disaster 2012)?
     Don't worry. Rajnikanth bought laptop with 3 years warranty. 

Let Rajni Rocks for many years.
Please feel proud to be a fan of him..!

***************************************************