Thursday, August 25, 2011

பஞ்ச தந்திரதிலிருந்து ஒரு கதை

இருதலைகள் கொண்ட பறவை



முதலில் பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது
2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை   
                                 இல்லாமல் வாழ்வது
3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்
4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்
5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை 
                                                                   செய்யாமல் செய்வது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகள் இவை. 

எடுத்துக் கொண்ட கதைக்கு வருவோமா.


அழகான ஒரு ஏரியின் கரையில் , அதிசயமான ஒரு பறவை வாழ்ந்து வந்தது, அதற்கு ஒரு உடல், இரண்டு தலைகள். இரண்டு தலைகளும் , ஒற்றுமையாக நேசம் கொண்டு பல நாட்கள் வாழ்ந்து வந்ததன. 

ஒரு நாள் , அமுதம் போன்ற ருசியான ஒரு பழத்தை ஒரு தலை கண்டது. எடுத்து ருசித்ததும், "ஆகா என்ன சுவை" என்றது மற்றொரு தலையிடம். இதைக் கெட்டு மற்றொரு தலை "எனக்கும் கனி தா" என்றது கனிவாய்.

பழத்தின் சுவையில் மயங்கிய அந்த தலையோ, "நம் இருவருக்கும் உடல் ஒன்று தானே, நான் தின்றால் என்ன? நீ தின்றால் என்ன?" என்றது. இது நாள் வரை எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டுவந்த அந்த தலைகளுக்குள் இப்படி பகை மூண்டது.  

ஏமாந்த தலை பழி வாங்கும் தருணம் பார்த்து காத்து இருந்தது. ஒரு நாள் , விஷக் கனி ஒன்று அதன் கண்ணில் பட்டது. அதை அந்த தலை உண்ணப் போவதைப் பார்த்ததும், பதறிப் போய் கத்தியது மற்றொரு தலை "உண்டு விடாதே , இருவருக்கும் ஆபத்து" என்றது. ஆனால் பழிவாங்கும் உணர்ச்சியில் 
அதைக் கேட்காமல் ஏமாந்த தலை உண்டு விட்டது. அந்த பறவை இரு தலைகளும் தொங்க இறந்து விழுந்தது. 

இந்த கதையிலிருந்து பல கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தங்கள் புரிந்து கொள்ளல் மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்வின் பல நிகழ்ச்சிகளுக்கு வேறு வேறு கோணங்களில் பொருத்தி பார்க்க முடியும். "அமுதமே ஆனாலும் அதை பகிர்ந்து உண்ண வேண்டும்" ,"துணை என்பது அவசியம்-ஒருவருக்கு ஒருவர் பகை இல்லாமல் இருத்தலும் அவசியம்"என்பதே இக்கதையின் அடிப்படை கருத்து. 


உங்களுக்கு இப்படி கதை சொல்லி கருத்து கந்தசாமி என்று பெயர் எடுக்கும் ஆசை இல்லை. எனக்கு ஒரு மலையாளப் பாட்டு பிடிச்சு இருந்தது. அதை கேட்கச் சொன்னா ஒண்ணுமே புரியலைன்னு கேட்காம ஓடிருவிங்க, அதுக்குத்தான் இந்த கதை. இந்த பாட்டுல இந்த கதையை அசல் மலையாள நடையில் எவ்வளவு அழகா நெடுமுடி வேணு அவர்கள் பாடுகிறார், கேளுங்கள்.


தாளம் என்ற ஜோப் எனும் இளம் பாடகனின் ஆல்பத்தில் இந்த பாடல் இடம் பெறுகிறது. நம் கமலின் "சுந்தரி நீயும்" குரல் போல லேசாக தோன்றுகிறது. 



உங்கள் மூளைக்கு ஒரு கருத்தும் , இதயத்திற்கு ஒரு நல்ல பாட்டும் கொடுத்து விடை பெறுவது

                                  உங்கள் பெரமு 

Tuesday, August 23, 2011

கண்ணீர் பூவிண்டே கவிலில் தலோடி !



ஒரு காலத்தில் மலையாள பாடல்கள் என்றால் அறுவை என்று இருந்தேன். அது எவ்வளவு பெரிய இழப்பு என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தவித்திருக்கும் தனிமை, மரங்கள் நெருங்கி சூழ்ந்த வனப்பு, மழைக் கொட்டி நின்ற ஈரம் வீசும் பொழுதுகள், லேசாக திறந்த சன்னலின் வழி திரண்டு வந்து உடல் சீண்டும் காற்று, இப்படி அடிக்கிக் கொண்டே போகிற மாதிரியான உயிப்பான பாடல்கள் சில கேட்க நேரிட்டது. அழுத்தங்களை ஒதுக்கி வைத்து அந்த பாடல்களுக்குள் மூழ்கிக் கிடந்தது மூர்சையானேன். அதில் ஒன்று இந்த பாடல். தமிழ் நடையும் , சம்ஸ்கிருதம் கலந்த தமிழ் வார்த்தைகளும், மூக்கொலிகளான "ங" மற்றும் "ஞ" இவற்றின் ஓசை நயமும் மனதை வசீகரிப்பவை.


கண்ணீர்  பூவிண்டே  கவிலில் தலோடி
ஈனம்  முழங்கும்  பழம்  பாட்டில்  முங்ஞி 
மறுவாக்கு  கே(ள்)க்கான்  காத்து  நி(ல்)க்காதே ..
பூதும்பி எண்டே  மறஞ்ஞு
எந்தே புல்லோர்க்குடம்  போலே  தேங்ஞி !! (கண்ணீர்  பூவிண்டே )

உன்னிக் கிடாவின்னு   நல்கான்  அம்ம நெஞ்சில்  பாலாழி ஏந்தி
ஆயிரம்  கை நீட்டி  நின்னு  சூர்ய  தாபமாய்  தாதந்தே ஷோகம்
விட  சொல்லவே  நிமிஷங்களில்  ஜலரேககள்   வீணழிஞ்ஞு
கதனங்களில்  துணை ஆகுவான்  வெறுதே ஒருங்குன்ன  மௌனம் ***
தூரே  புல்லோர்க்குடம் கேனுறங்கி .. ( கண்ணீர்  பூவிண்டே)


ஒரு  குஞ்ஞு பாட்டாய் விதும்மீ  மஞ்ஞு  பூஞ்சோலை எந்தோ   திரஞ்ஞு
ஆரேயோ  தேடிப்பிடஞ்ஞு  காட்டும் ஒருபாடு  நாளாய் அலஞ்ஞு 
பூன்தென்னலில் பொன்னோலமாய் ஒரு பாழ்க்கிரீடம் மறஞ்ஞு
கணிவேகுமீ வேண்மேகவும் மழநீர்க் கினாவாய்  மறஞ்ஞு ***
எந்தே புல்லோர்க்குடம்  போலே  விங்கி ( கண்ணீர்  பூவிண்டே)

தமிழில் பல்லவி மட்டும் இப்போது:

கண்ணீர் பூவிட்ட கவியில் நீராடி ..
இதயம் முழுகும் பழம் பாட்டில் ஒழுகி ..
ஒரு வாக்கு கொடுத்தாள்-காற்றில் நில்லாதே
பூந்தும்பி என்றே மறைந்தாள்
எந்தன் உள்ளோர் குடம் சோகம் தேங்க !


இந்த வசீகர பாடகனின் மேலும் சில பாடல்கள் இங்கே :




*** - கிரீடம் மலையாளம் திரைப்படத்தில் இடம்பெற்ற மூலப் பாடலில் 

          இந்த வரிகள் இடம்மாறி வரும்


Tuesday, August 9, 2011

பீகீ பீகீ ராத்தோம் மேன் - லெஸ்லி லூயிஸ்


இந்தி பாட்டெல்லாம் அதிகம் கேட்டது இல்லை. மன்னார்குடியில் எங்க அத்தை வீட்டுல கொஞ்சம் , பின் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் படித்த இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் , அப்புறம் எப்போவாது கேட்பது வழக்கம். இங்கு சுவீடனில் மெல்ல கோடை காலம் விலகி
       கொண்டு இருக்கிறது.     வந்து ஓராண்டுகள் முடியப் போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஐந்தாவது இடத்திற்குமாறி இருக்கிறேன். தங்குமிடம் கிடைப்பது இங்கு சுலபம் அல்ல. ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு தங்க இடம் வாங்கியாச்சு. அருமையான இடம், பச்சை பசேல் என கண்ணைப் பறிக்கும். என் அறைத் தோழனோடு ஒரு சிறு நடை போடலாம் என்று கிளம்பினேன்.அவன் அவனுக்கு தெரிந்த தமிழ் பாடல்களையும் நான் எனக்குத் தெரிந்த இந்தி பாடல்களையும் சொல்லிக் கொண்டே வந்த போது, எங்கோ நினைவின் ஆழத்தில் புதைந்து கிடந்த பீகீ பீகீ ராத்தோம் மேன் - லெஸ்லி லூயிஸ் புது வடிவம் கொடுத்த பழைய இந்தி பாடல் சட்டென்று வெளியில் வந்தது. மழை பெய்து மரங்கள் ஈரம் சொட்டுக் கொண்டிருந்த காட்டுக்குள் மனசு திறக்க , வாய் விட்டு , என் நண்பனின் காது கிழிய பாடினேன். "யுவர் வாய்ஸ் இஸ் வெரி குட் மேன்" என ஒரு போடு போட்டான், என் பன்பலையை சட்டென்று நிறுத்திவிட்டேன். ஆனால் ஸ்ரீநிவாஸ் என்னை சுத்தி அந்த காட்டுக்குள்ள எனக்காக அந்த பாட்டை பாடிகிட்டே இருந்தார். சில நேரத்தில் சில பாடல்கள் என்கிற அனுபவம் எல்லோருக்கும் அப்பப்ப வரும். மறுநாள் நம் தோழர்களிடம் வந்து "அந்த பாட்ட நேத்து ஒரு இருபது தடவ கேட்டுகிட்டே இருந்தேன் டா" அப்படின்னு ஏதோ ஒரு பாட்ட சொல்லிக் கொள்வோம். அது மாதிரி அறைக்கு திரும்பியதும் இந்த பாட்ட இன்னும் கெட்டு கிட்டே இருக்கேன். உங்களுக்கும் புடிச்சா கேளுங்கள். ஒரே ஒரு சினிமா பாட்டாவது எழுதனும் என்று லேசாக ஒரு ஆசை இருப்பதால் இந்த பாட்டுக்கு தமிழ் வரிகள் எழுதி முயற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம் என்று சரணத்தை தொடங்கி விட்டேன். முழுமையாக முடிக்க முடிந்தால் மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.

இந்தி வரிகள் தமிழில்:

பதிவிறக்கம் செய்ய (Right-Click+Save Link As)


கிஷோர்: பீகீ  பீகீ ராத்தோன் மேன், மீட்டி மீட்டி  பாத்தோன் மேன் 
ஐசே  பர் சாத்தோன் மேன் கேசா லகுதா  ஹேய்?

லதா:ஐசா லகுதா  ஹேய் தும் பன்கே  பாதல் ,
மேரே  பதன்   கோ  பீகோகே  முஜ்ஜே  ச்சேந்த்  ரஹே  ஹோ (ஹோ  ஒ )
ச்சேந்த்  ரஹே  ஹோ  (2)

லதா: அம்பர்  க்கேலே  ஹோலி ஊய் மா
பீகி  மோரி  சோலி  ஹம்ஜோலி  ஹம்ஜோலி  (2)
ஒ  பாணி  கே  இஸ் ரேலே  மேன்  சாவன்  கே இஸ்  மேலே  மேன் 
ச்சட்  பே  அகேலே  மேன் 
கேசா லகுதா  ஹேய்

கிஷோர் : ஐசா லகுதா  ஹேய் தும்  பன்கே  கட்டா
அப்னே  சஜன்  கோ  பீகோகே  க்கேல்  க்கேல்  ரஹீ  ஹோ  ஒ 
க்கேல்  ரஹீ  ஹோ 

லதா : ஐசா லகுதா  ஹேய் தும் பன்கே  பாதல் ,
மேரே  பதன்   கோ  பீகோகே  முஜ்ஜே  ச்சேந்த்  ரஹே  ஹோ (ஹோ  ஒ) 
ச்சேந்த்  ரஹே  ஹோ

கிஷோர் : பர்க்ஹா  சே  பச்சாலுன் துஜே 
சீனே  சே  லகா  லூன் 
ஆ  ச்சுபாலுன் ஆ ச்சுபாலுன் (2)
ஒ ! தில் நே  புக்காரா தேக்ஹோ  ருத்  கா  இஷாரா  தேக்ஹோ 
உஃப்  ஏ  நசாரா தேக்ஹோ 
கேசா லகுதா  ஹேய், போலோ ?

லதா: ஐசா  லகுதா  ஹேய் குச்ச் ஹோ  ஜா(யா)யேகா
மஸ்த் பவன்  கே  ஏ  ஜ்ஜோகே சையான் தேக் ரஹே  ஹோ  ஒ 
தேக் ரஹே  ஹோ  ஒ 
ஐசா லகுதா  ஹேய் தும் பன்கே  பாதல் ,
மேரே  பதன்   கோ  பீகோகே  முஜ்ஜே  ச்சேந்த்  ரஹே  ஹோ  ஹோ  ஒ 
ச்சேந்த்  ரஹே  ஹோ ... 

Thursday, August 4, 2011

மாதவி சொன்ன எழுத்தெல்லாம் ...


  "மாதவி சொன்ன எழுத்தெல்லாம் கல்லு
                                   சிலேட்டில் எழுதினேன் அன்று"   -   [ இரு விகற்ப குறள் வெண்பா ]




ஊராய்ச்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிரமேல்குடி , ஜூன் மாதம், 1991:அன்னையின் முந்தானையை முதன்முதல் விட்டு ,அழுது கொண்டே ஒண்ணாம் வகுப்புக்குள் குழந்தைகள் நுழைந்து கொண்டிருக்க, அன்னையை  இழுத்துக் கொண்டே வந்து தன்னை பள்ளியில் சேர்த்துக் கொண்டது ஒரு பிள்ளை. கணித்து விட்டீர்களா ? ஆமாம் நானேதான். படிப்பின் அருமை விளங்கி கொண்ட அதிசயக் குழந்தையா ? சத்தியமாக இல்லை. அடம் பிடிப்பது எப்படி என்று என்னிடத்தில்தான் கற்க வேண்டும் என்று அம்மா அடிக்கடி எனக்கு நினைவு  படுத்தியிருக்கிறாள் பின்னாளில். அப்படியான அடத்தில் இந்த சேட்டையும் ஒன்று. என் வீடு கடைத் தெருவில் அமைந்திருக்கும். என் வீட்டுக்கு எதிரில்தான் பேருந்து நிறுத்தமும். நான் ஒட்டுத் திண்ணையில் ஓடி ஆடி விளையாடும் போதெல்லாம் , தினமும் பள்ளிக்கு குழந்தைகள் சீருடையில் , தோள் மாட்டி பை ஒரு புறம் தொங்க, பிளாஸ்டிக் வாட்டர் பேக் மறுபுறம் தொங்க ஒய்யாரமாய் நடைபோடக் கண்டு வந்தேன். திடீரென தோள் மாட்டிப் பையும், வாட்டர் பேக்கும் என்னை ஈர்த்தன. எனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து கதற ஆரம்பித்து இருக்கிறேன். சமாதானத்திற்காக என் அம்மாவும் "நீ பள்ளிக் கூடத்தில் சேர்ந்ததும் வாங்கித் தருகிறேன்" எனச் சொல்லி இருக்கிறார். இப்ப புரியுதா ஏன் இந்த வாலு அம்மாவை அன்றைக்கு பள்ளிக் கூடத்திற்கு இழுத்து வந்தான் என்று. ஒண்ணாம் வகுப்புக்கே சிலேட் மட்டும் இல்லாம , நோட்டு புத்தகம், ஜாமென்றி பாக்ஸ், பேனா , பென்சில் என சகலத்தோட பட்டிக்காட்டுல யாரு போயிருப்பாங்க சொல்லுங்க.

கன்னி மாதா போல் இன்னொரு அன்னை அங்கே எனக்காக காத்து இருந்தார். அவர்தான் மாதவி டீச்சர். ஆசிரிய பயிற்சி முடித்து அவருக்கும் அன்றுதான் முதல் வகுப்பு. இந்த விவரத்தை மேல் நிலை பள்ளியில் படிக்கும் போது , எங்கள் ஊரிலே வசிக்கும் சரோஜா டீச்சரிடம் தெரிந்து கொண்டேன். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வைத்திருக்கும் சகலமும் என்னிடத்தில் இருப்பதை பார்த்து அவர் வியந்திருக்க வேண்டும். இவன் கிட்ட என்னமோ இருக்குன்னு நினைச்சாங்கலோ தெரியாது. இல்ல சின்ன வயசுல கொஞ்சம் அழக்கா இருப்பேன்னு சொன்னா நம்பவா போறீங்க. முதல் நாளே அந்த டீச்சர் என்ன அவமானபடுத்திடாங்க. உயரப்படி நிக்க வைக்கிறேன்னு என்னை முதல நிக்க விட்டாங்க. இது தான் முதல்ல நான் முதல் மாணவனா தேர்வான விஷயம். அப்புறம் படிப்பிலையும் கலக்க ஆரம்பிச்சிட்டோம்ல. ஒரு சில மாதங்களில் அந்த டீச்சர் எனக்கும் சேர்த்து மத்தியான சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. எனக்கு ஆசையா மீன் முள்ள எடுத்துட்டு ஊட்டி விடுவாங்க. எங்க ஊருக்கே இரண்டு முக்கிய பேருந்து நிறுத்தங்கள். ஒன்று என் வீட்டுக்கு எதிரே , மற்றொன்று தெருவின் மறுமுனையில் இருக்கும் எங்கள் டீ கடைக்கு எதிரே. பள்ளிக்கு செல்ல வேண்டுமானால் கடைக்கு எதிரேதான் இறங்க வேண்டும். மாதவி டீச்சர் தன் பணியின் இறுதி நாட்களில் எங்க வீட்டுகிட்ட இறங்கி என்னை தூக்கிட்டே பள்ளிக் கூடத்துக்கு போவாங்க. எங்கம்மா என்கிட்டே சொன்னப்ப கொஞ்சம் டச்சிங்கா இருந்துச்சு.

அந்த ஓராண்டு அன்பில் எனக்கு நினைவில் இருப்பது மிக மிக கொஞ்ச விசயங்கள்தான். கணக்கில் நூறு மதிப்பெண்கள் எடுத்து இருப்பதை மாணவர்களிடம் சொல்லி கைதட்ட வைத்துவிட்டு என்னை தமிழில் எடுத்த 99 மதிப்பெண்ணை வாசிக்க சொன்னார். ஏனோ தெரியவில்லை,திணறி நின்றேன்.
அவர் திட்ட ஆரம்பித்த பின்னரே சரியாக சொன்னேன் !

அத்தை மீது கொண்ட பிரியத்தில் , அவர் காலில் அடிபட்டு மருத்துவமனையில்  இருந்தபோது , அரையாண்டு தேர்வை விட்டுவிட்டு குடும்பத்தோடு அத்தையை பார்க்கச் சென்று விட்டேன். என்னை கட்டாயம் பெயில் ஆக்கப் போவதாக என் தந்தையிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார், மாதவி டீச்சர் குறுக்கிட்டு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தார். "உனக்கு பரீட்சை , பள்ளிக் கூடம்தான் முதல்ல அப்புறம்தான் மத்ததெல்லாம் " எனச் சொன்னவரிடம் சமத்தாய் தலையாட்டியது நன்றாக நிழல் ஆடுகிறது.


பாசம், அன்பு எல்லாம் புரியாத வயசு, லீவு முடிஞ்சு ரெண்டாப்பு வந்தா டீச்சர் இல்ல. ஏன் இல்லனு தெரியவும் இல்ல. யாருகிட்டயும் கேட்கணும்னு தோணல. ஆனா அவங்க என் கிட்ட கேட்டுக்கிட்டத ஒண்ணு விடாம செஞ்சேன். ஆமாங்க அதுக்கப்புறம் படிப்புல அந்த பள்ளிக் கூடத்தையே கலக்கி எடுத்தோம்ல. விடாக் கொண்டன் போல, யாரையும் முதல் மதிப்பெண் எடுக்க விட்டதே இல்லை. இது என் கல்லூரி இளங்கலை வரைத் தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு நடத்தும் திறனாய்வு தேர்வில் , கல்வி மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களில் நானும் தேர்வானதும் பள்ளியே என்னை தலையில் வைத்து கொண்டாடியது. அந்த பள்ளியின் வரலாற்றில் அதுதான் முதல் முறை. அருகிலேயே இருக்கும் தொடக்கப் பள்ளிக்கு என் பழைய ஆசிரியர்களை பார்த்து , மிட்டாயோடு இந்த இனிப்பான செய்தியை சொல்வதற்காக சென்றேன். மிட்டாயை எடுத்துக் கொண்ட சரோஜா டீச்சர், மாதவி டீச்சர் இதை கேள்வி பட்டா ரொம்ப சந்தோஷ படுவாங்க என்றதும் அத்துனை நாள் மறந்து இருந்த அவரின் நினைவு மீண்டும் வந்தது.

எங்கள் ஊரில் மேல்நிலை பள்ளி இல்லை. நாட்டுசாலையில்-நம்ம நடிகர் விஜய குமார் ஊருதான்- பேருந்தில் சென்று படித்தேன். சுத்து பட்டு பதினெட்டு பட்டிலேயும் என் பெயர் பெரமநாதன் னு சொன்ன இப்படி எல்லாம் பேரு இருக்கான்னு கேட்பாங்க. அந்த ஊருல ஒரு பய கூட கேட்கல. அப்புறம்தான் தெருஞ்சுது என் பேர்ல நிறைய கிழவனுங்களே இருக்காங்க. அது அந்த ஊரு அய்யனார் பெயராம். அந்த ஊரு நர்சுதான் இந்த பேரை வச்சு, பிறந்த முதல் நாளே ஆபரேசன் தியேட்டருக்குள் பத்திரமாக எடுத்து போனாராம். என் அதிர்ஷ்டத்தை பாருங்கள், அந்த ஊரில் ரெண்டு வருஷம் தெரு தெருவா விளையாடிவிட்டு , கடைசியா போகப் போறப்பதான் தெரிய வந்தது, அந்த ஊருதான் மாதவி டீச்சர் ஊருன்னு, அதுவும் எங்க ஊரு சத்துணவு சமைக்கிற அம்மா ஒருத்தங்க சொன்னாங்க.

அதுக்குள்ள அவங்க எத்தனையோ ஊருக்கு மாறிவிட்டார்கள், இந்நேரம் எங்கே இருக்காங்களோ? கண்டிப்பா அவங்கள கண்டுபிடிச்சு மானசீகமா காலில் விழ வேண்டும் என்று தோன்றுகிறது. முக்கியமே இல்லாதவங்கன்னு நாம ஒதுக்குற எத்தனையோ தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பசுமரமாய் இருக்கும் நம் உள்ளத்தில் நல்ல விதைகளை அமைதியாக தூவி விட்டு நகர்ந்து விடுகிறார்கள். கண்டிப்பா தொடக்கப் பள்ளிகளுக்கு இந்த மாதிரியான பொறுமை மிக்க, அன்பு மிக்க பெண்களே சிறந்தவர்கள். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் டீச்சர் ட்ரெயினிங் அரசின் இலவச சீட்டு அல்வா போல் கிடைத்தும் நான் போக மனமில்லாது இருந்தது, என் வருங்கால மாணவன் ஒருவனுக்கு கிடைக்கப்போகும் மாதவியை தடுத்து விடக்கூடாது என்பதால் தான்.

வாழ்க ஒண்ணாப்பு டீச்சர்ஸ் !