தொலைக்காட்சியில் "மேயாத மான்..மேயாத மான்" என்று டி.ஆர்.மகாலிங்கம் இழுத்துகிட்டே போறத எங்கப்பா ரசிச்சு பார்க்கும் போது , எரிச்சல்தான் வரும். இப்பத்தான் அதுக்குள்ள இருக்கிற சங்கதி எல்லாம் தெரியுது. நம்ம ஆளுங்க காதல் ரசனை மிக்கவர்கள் என்பதற்கு இந்த நாடகமும் ஒரு சான்று. அதுவும் எப்படின்னுதான் பாருங்களேன்.
பின் புலம் :
குறவர் பணித்த காவல் பணியதனை
குறத்தி வள்ளி செய்திருக்க - மயிலேறி
குமரன் வந்தான் அவளை சிறை எடுக்க !
வேடன் வேடமிட்டு - "தொலைத்தேன்
வேட்டையாடி மான் ஒன்றை" என்றான்
வேட்டுவ குலத்தி வள்ளியும் திகைக்கவே !
"என் விழி போட்ட வேலிக்குள் அயல் மான்
[இந்த இடத்தில்தான் "மேயாத மான் .." என்ற இரு பொருள்
பாடலை குமரன் பாடுகிறான்]
குறத்தி வள்ளி செய்திருக்க - மயிலேறி
குமரன் வந்தான் அவளை சிறை எடுக்க !
வேடன் வேடமிட்டு - "தொலைத்தேன்
வேட்டையாடி மான் ஒன்றை" என்றான்
வேட்டுவ குலத்தி வள்ளியும் திகைக்கவே !
"என் விழி போட்ட வேலிக்குள் அயல் மான்
எதுவும் நுழைந்திடக் காண்கிலையே "
என்றாளே விரிகண் குறத்தியும் !
விடுவானோ குமரன் ! அடுத்ததடுத்து
விடுத்தான் வினாக்'கள்' கணைகளை
விடைகள் இல்லாமல் அவளும் தவித்திடவே !
[சலித்துப் போன வள்ளி ]
"சரி ! சொல்லிடு மான் அதன் அடையாளம்"
சந்தமெடுத்து அவளழகை அழகன் பாட
சரியாய் கேட்டுவிட்டாள் அறியாது !
[இந்த இடத்தில்தான் "மேயாத மான் .." என்ற இரு பொருள்
பாடலை குமரன் பாடுகிறான்]
தப்பி ஓடிவிட்ட மானென்று
தன்னிடம் அகப்பட்டு நின்ற மானை
தமிழ் தேன் எடுத்து பாடி முடித்தான் அவனும் !
மரத்தன்ன மண்டையோடு இருந்ததை
மடந்தை அவள் உணர்ந்து கொண்டாள்
மன்னவன் வந்த சேதி புரிந்து கொண்டாள் !
வேலனை நினைந்துருகும் நெஞ்சமிது - இந்த
வேடனை மணப்பதில்லை "அறிவாய்"
வேறு பெண் பார்த்து வழி போவாய் ! [என்றாள்]
அண்ணன் ஆனை முகன் யானையாய்
அவளை துரத்த - கிழவனாய் தோன்றி காத்து
சினிமா பாட்டு :
தன்னிடம் அகப்பட்டு நின்ற மானை
தமிழ் தேன் எடுத்து பாடி முடித்தான் அவனும் !
மரத்தன்ன மண்டையோடு இருந்ததை
மடந்தை அவள் உணர்ந்து கொண்டாள்
மன்னவன் வந்த சேதி புரிந்து கொண்டாள் !
வேலனை நினைந்துருகும் நெஞ்சமிது - இந்த
வேடனை மணப்பதில்லை "அறிவாய்"
வேறு பெண் பார்த்து வழி போவாய் ! [என்றாள்]
அண்ணன் ஆனை முகன் யானையாய்
அவளை துரத்த - கிழவனாய் தோன்றி காத்து
அணங்கவளை மணந்து காட்டினான் திரு உருவம் !
சினிமா பாட்டு :
காயாத கானகத்தே நின்றுலாவும் நற்காரிகையே
மேயாத மான் ....... ! [1 நிமிடம் 40 வினாடிகள் ]
புள்ளி மேவாத மான் !
மேவும் கான(க)மடைந்து நறு சந்தனமும்
புனுகும் கமழும் களபங்கள் அணிந்து
சுணங்கு படர்ந்து - புல் மேயாத மான் !
கானக் குறவ கண்மணி என வளர்
கானக் குயிலின் நிகர் குரல் உடையது !
மேயாத மான் !
மேயாத மான் !
தேனும் பாகும் தினை மாவும்
தின்பதல்லால் - புல் ஒரு போதும்
மேயாத மான் ! [கற்பை புகழ்கின்றான் ]
சாயாத கொம்பு ரெண்டு இருந்தாலும்
அது தலை நிமிர்ந்து
பாயாத மான் ! [18+]
மான் வரக் கண்டதுண்டோ?- ஒரு
அது தலை நிமிர்ந்து
பாயாத மான் ! [18+]
மான் வரக் கண்டதுண்டோ?- ஒரு
மான் வரக் கண்டதுண்டோ ?
பசும் புல் போலே நல் மேனி சுணங்கிட
*நவில் தமிழ் போல் அழகிய
பசும் புல் போலே நல் மேனி சுணங்கிட
*நவில் தமிழ் போல் அழகிய
மான் வரக் கண்டதுண்டோ ?
- தொலைந்த மானைத் தேடும்
பிரேம் சத்யா
<<--=== XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX===-->>
- தொலைந்த மானைத் தேடும்
பிரேம் சத்யா
<<--=== XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX===-->>
*நவில் - இது சரியானது என்று என்னால் உறுதி செய்ய முடியவில்லை . நானும் ஐந்தாறு முறை
கேட்டுப் பார்த்தேன். கூகிளும் பாடல் வரிகளை எனக்கு தேடிக் கொடுக்கவில்லை. மற்ற வரிகளை
இரண்டு மூன்று முறை கேட்டே எழுதிவிட்டேன் !
4 comments:
very nice prem
தொலைத்த மான் கிடைக்கும்!
வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே
’களபங்கள்’ என்று திருத்துக.
திருத்தி விட்டேன் அய்யா ! சிறு சந்தேகம் திடீரென உதித்தது- பாடலில் ஏற்கனவே நறு சந்தனமும் என்று வரும் போது ஏன் கவிஞர் மறுமுறை களபங்கள் என்ற சந்தனத்தின் மற்றொரு பெயரை பயன் படுத்துகிறார். சந்தனமும் புனுகும்
சேர்ந்து குழைத்து உடலில் பூசிக் கொள்ளும் அந்த பட்டைக்கு ஆகு பெயராய் இருக்குமோ?
> Good question.
>
> களபம் என்றால் கலவை என்ற பொருளும் உண்டு.
> நறுஞ்சந்தனமும், புனுகும் கலந்த கலவை.
>
> யானைக் கன்றுக்கும் களபம் எனப் பெயர்.
> அதையும் இதையும் கீழே இழுத்து விளையாடுவதால்.
>
> இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
> என்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
> வம்பதாம் களபம் என்றேன் ''பூசும்'' என்றாள்
> மாதங்கம் என்றேன் ''யாம் வாழ்ந்தோம்'' என்றாள்
> பம்புசீர் வேழம் என்றேன் ''தின்னும்'' என்றாள்
> பகடு என்றேன் ''உழும்'' என்றாள் பழனந்தன்னை
> கம்பமா என்றேன் ''நல் களியாம்'' என்றாள்
> கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.
>
> ஈழத்துக்கும், உங்கள் உப்பசாலாவுக்கும்
> நிறைய தொடர்புண்டு. பின்னர் எழுதுவேன்.
Dr.N.Ganesan - http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html
Post a Comment