Monday, April 4, 2011

எழுதப்படாத பதிவுகள்




இது என்னோடு நெருக்கமாக 
வாழ்ந்த ஒரு முட்டாளின் கதை.
எழுத நினைத்து தினமும் அவன் 
தன் டைரியை திறப்பதும் - வெற்று 
ஏடுகளை புரட்டுவதுமாய் இருந்தான்.
அவன் உள்ளத்தில் ஏதோ உணர்ச்சி 
பொங்கி கொண்டிருப்பதை 
விழிகளும் - புன்னகை இறந்து போன
முகமும் சொல்லி கொண்டிருந்தன.
பயமும் , கோழைத்தனமும் 
எப்போதும் அவனோடு இருந்து 
கொண்டே இருக்கும். நெருக்கமான 
தோழன் என்னிடத்தில் கூட 
பிரச்சினைகளை சொல்ல தயங்குவான். 
முன்னறிவிப்பு ஏதும் இல்லமால் 
திடீரென போய் விட்டான் 
பரலோகத்திற்கு ..................................
அவன் இறந்து போன கலக்கத்தோடு 
திறந்து கிடந்த டைரியை எடுத்து 
வாசிக்க தொடங்கினேன். முதலில் ஒன்றுமே 
புரியவில்லை. யார்யாரையோ  தாக்கி
எழுதியது போல் இருந்தது.யார் தன்னை, 
தன் உணர்சிகளை ,அழகாய் கட்டி வைத்திருந்த
கூட்டை கலைத்தார்களோ - அவர்களை 
பார்த்து கேள்விகள் கேட்பது போலவும் 
இருந்தது. அதன் உயிர் சிதையாமல் எழுத 
முயற்சிக்கிறேன் என் வழியில் ! 

"எனை நிர்வாண படுத்தி முச்சந்தியில் 
நிறுத்தாத குறையாக - என் ஒட்டு 
மொத்தங்களையும் ஏன் உருவிவிட 
துடிக்கிறீர்கள் - நன்றியை காட்ட 
தெரியாமல்தான் உங்கள் இம்சைகளை
பொறுத்து இருந்தேனா ? - சலசலப்பும் 
சத்தங்களும் கொண்டு 
வேண்டும் இடமெல்லாம் ஓடி அந்த
மகா சமுத்திரம் போய் கலக்கும் 
பேராறு போல வாழ்ந்து கொண்டு - ஒரு 
சிறு பள்ளத்தில் தேங்கி கிடக்கும் நீரென 
அமைத்த என் வாழ்வதனை - பாறை வைத்து
மூடி விட நினைபதேனோ ? - இந்த 
பிச்சைகாரனின் நிம்மதி, ஆனந்தம்  கண்டு 
பொறாமை தீ வளர்த்து - அசந்து போன 
சமயம் கண்டு கொளுத்தி விட்டீர்களே
மாண்புமிகு அரண்மனைவாசிகளே நியாமா?
காலத்தின் துணை கொண்டு 
எல்லாவற்றிலும் இருந்து என்னால்
மீண்டு விட முடியும் - ஏன் உங்கள் 
அரண்மனையை விட இருமடங்கு 
உயரமாய் என்னாலும் மாளிகை 
எழுப்ப முடியும் - இருந்தும்  என் 
தன் மானத்தை துண்டு துண்டாய்
நீங்கள் கூறு போட கண்டும் 
தடுக்க முடியாதவனாய் கை கட்டி 
நின்று விட்டேனே - அப்படி என்ன கிடைத்துவிட 
போகிறது இந்த அற்ப உயிரை சுமந்து இனி.
நான் மகான் அல்ல உங்களை மன்னிப்பதற்கு.
கொடியவனும் அல்ல - என் கோபத்திற்கு 
உங்ககளை இரையாக்குவதற்கு.
மரணிக்கும் முன் என்
கடைசி வேண்டுகோள் :
என் மரணம் பற்றியாவது அவதூறு 
பேசாதீர்கள். என் இனிய இந்த புனித 
மரணத்தில் கலங்கம் பூசாதீர்கள்.
கண்ணீர் வடிக்க வேண்டாம். இந்த 
மரணத்தை சுற்றி கதை வடிக்காமல் இருங்கள்.
வழக்கமாக நீ எல்லோரையும்
தேடி வருவாய் இறுதியில் 
இதோ பார் நானே உன்னை 
தேடி வருகிறேன் பாதியில்.
மரணமே உன் பாதங்களை காட்டு
முத்தம் இட வேண்டும். "

கடைசி பக்கத்தில் இப்படி - சிதறி கிடந்தது  
அவன் உயிர் - காய்ந்து  கிடந்தது 
எழுதுகோல் மையும் , அவன் உணர்சிகளும் !


இறுக்கத்தோடு முதல் பக்கம் புரட்டி படிக்க
தொடங்கினேன் , கனத்து கிடந்து கடைசியாய் 
இறக்கி வைத்த அவன் சுமைகளை.

அவன் உணர்சிகள் இதோ :

"நான் அறிவு மயங்கி 
கிடந்ததாய் - நீங்கள் 
இப்போது குறிக்கும் 
என் கடந்த காலத்தின் 
சில இடைவெளிகளில் 
அப்போது மும்முரமாய் 
தங்கள் வேலைகளில்
மூழ்கி கிடந்தீர்கள் ! 

பின்னாளில் - என்
பழங்கதை கேள்விப்பட்டு 
அக்கறை கூரைக்கு 
அடியில் அமர்ந்து 
கூடி கூடி கதைத்தீர்கள் !
அதற்குள் சில 
நட்சந்திரங்களின் 
தூரம் அளந்து - பாதை 
அமைத்து கொண்டிருந்தேன் !

காதுகள் திறந்து இருப்பதாய்
நம்ப வைத்து விட்டு - எனை 
ஏதேதோ பேச விட்டு வேடிக்கை 
பார்த்தீர்கள் - உங்கள் சந்தோசம் 
முக்கியம் அல்லவா !
பேசினேன் நீங்கள் 
எதிர்பார்த்ததெல்லாம் !

என் நாக்கு சொல்ல நேர்ந்த 
சில அவசியமான பொய்களை
காரணம் காட்டி - என் இதயம் 
கொண்ட உண்மையான 
உறவினை சந்தேகித்தீர்கள் !
என் இதயம் நோகாமல் 
இருக்க - உண்மையை மறைத்து 
தாங்கள் கூறிய எத்தனையோ 
தற்காலிக பொய்கள் - என் 
நினைவில் இருப்பதை கொள்க !

அடுத்து என்ன நடக்கும் என 
விளங்காத மர்மங்கள் நிறைந்த 
பாதைகளில் - நீண்ட நாள் 
வாழ்ந்தவன் ! - சக வயது 
சகாக்கள் அனுபவிக்கும்
எத்தனையோ வசதிகளை 
என் வசதி அறிந்து துறந்தவன் !
தூக்கங்களை ஏக்கங்களுக்கு 
இரை போட்டு விட்டு 
என் வீட்டு கூரை கிழிசல் வழி 
வெண்ணிலா ரசித்தவன் !
அன்னையின் முந்தானைக்குள் 
அரை நாளும் , தகப்பனின் 
பாதுகாப்பில் அரை நாளும்
கழிக்கும் நீங்கள் - வந்து விட்டீர் 
வரிந்து கட்டி கொண்டு - எனை  
வசை பாடுதற்கு ..!

எலும்புகளோடு 
பிறந்திருந்தும் 
புழுவாக எனை
நெளிய வைத்தீர்கள் !

(தணிக்கை செய்ய படவேண்டிய 
 சில வரிகள் இங்கு இருந்தன 
கத்தரித்து விட்டேன் ...)

எரிச்சலும் துண்டம் 
துண்டமாய் கூறு போடும் 
கோபம் பூசி மழுப்பப்  பட்ட 
பார்வைகளும் - என் மீதான 
சந்தேகமில்லாத 
அவநம்பிக்கைகளும் - எனை 
ஒவ்வொரு நொடியும் 
ஒரு கோடி  முறை 
மரணிக்க செய்தன !

தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் 
பிழைப்பேனா? மாட்டேனா ?
எனக்காக காலம் மறைத்து 
கொண்ட அழகான மர்மம் அது !
அந்த மர்மத்தை திறந்து 
பார்க்க சொல்லி எனை 
அவசர படுத்தாதீர்கள் ! 
என்ன செய்ய - தங்களுக்கு 
பெரு மூளை கொடுத்தவன் 
எனக்கு சிறு மூளை 
கொடுத்து விட்டான் !

நீங்கள் வைத்து விளையாடிய 
என் வாழ்வை - தட்டி பறித்து 
கிடைத்த சிறு புத்தி கொண்டு 
பொறுப்புகள் உணர்ந்து 
நாட்கள் நகர்த்தும் 
இந்நாளில் கூட
...............
ஆறிப் போன விசயங்களை 
அடுப்பில் ஏற்றி - அதில் 
கடுப்பு எண்ணெய் ஊற்றி 
தாளிப்பதாய் 
புகை வந்து என்னிடம் 
கதை படித்தது ! 

உங்ககளை போல் எத்தனை பேர் 
எங்களை போன்றோரை உருவாக்கி 
கொண்டு இருக்கின்றீர் - போராடி 
நாங்கள் ஜெயிக்கும் வரை 
பொறுக்க மாட்டீர். தினம் தேடி வந்து 
தருவீர் பெரும் இடைஞ்சல்.
திமிரான உங்கள் புத்திக்கு என் 
வருடல் உதவாது. உடம்பில் எங்கேனும்  
இதயம் துடித்து கொண்டிருந்தால்
நிச்சயம் பாடம் புகட்டும் - நான் எடுக்க போகும்
இந்த முடிவு ..........................."

என்று கடைசிக்கு முன் பக்கம் வரை
எழுதி இருந்தான்.இதைதான் இத்தனை நாள்
எழுத நினைத்து நினைத்து 
எழுதாமலே இருந்திருக்கின்றான் அவன்.

ஒன்று மட்டும் புரிந்தது, சிலருக்கு சாதாரண 
விசயம் கூட மனதை இந்த அளவு பாதிக்கும் என்பது.
யார் வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு 
தன் வேலை உண்டு இருந்தவன் திடீரென இப்படி 
அவசர பட்டு போய் விட்டான். 
மிகுந்த அதிர்ச்சி என்றாலும்
ஒரு சின்ன பொறியையும்
எனக்குள் பற்ற வைத்திருக்கிறது!

இல்லாத புகழ்ச்சி வேண்டாம் !
இருக்கின்ற இகழ்ச்சி வேண்டாம் !
குழந்தைக்கு நடை பழக்கும்
அன்னை போல் உள்ளம் கொண்டு 
அவர்களை அவர்களாக
வாழ விடுவோம் !
தடுமாறும் போது
ஓடி போய் தோள் கொடுப்போம் !
எங்கு சுற்றினாலும் எவ்வளவு 
செல்வம் திரட்டினும் இறுதியில் 
எல்லோருக்கும் மரணம்
முடித்து வைக்கும்  வாழ்விது !
மனிதர்கள் - அதிலும் அன்பான 
தோழர்கள், உறவுகள் இவர்களை விட 
பெருஞ்செல்வம் இல்லவே இல்லை!
நம்பி கை கொடுப்போம் !
நம்பிக்கை கொடுப்போம் !



No comments: