அவள் : என்னோடு உனக்கு நேர்ந்த
காதல் எப்படி ?
அவன் : ஆசீர்வதிக்கப்பட்ட
மழை நாளில் - கூட்டமில்லாத
பேருந்தின் ஜன்னல் வழி
ஈரமாய் வந்து உரசும்
மெல்லிய தூறலில்
மொத்தமாய் லயித்து
கிடைக்கையில்....
செவிப்பறையில் - வெறுமனே
பட்டு தெறிக்காமல்
இரகசியமாய் - உயிருக்குள்
இறங்கி - தேங்கி கிடந்த
பரவசம் அள்ளி வெளியில்
எறிந்து விட்டு
அமர்ந்து கொள்ளும்,
ஓட்டுநர் தட்டிவிட்ட
எதிர்பாராத இளையராஜாவின்
பாடலாய் ---
உன்மீதான காதல் !
என்றோ "நான்"
அசந்து இருக்கையில்
நுழைந்து கொண்டது !
அவள் : போடா ! ஒண்ணுமே
புரியல !
என் காதல் சாய்த்தது ?
அவள் : உன்னோட talent,
நல்லா படிக்கிற, அப்பறம்
Drawing, இன்னும் நிறைய !
அவன் : ஓகோ !
ஒருவேளை - நீ
வரிசை கட்டி அடுக்கிய
யாவும் ஒன்று விடாமல்
ஓடிவிட்டால் ...
அவள் : ஊம் .. ம் ...
அப்பவும் பிடிக்கும் !
ஹேய் ! Now I got your point !
நானும் களவு போன வீடுதான்
கள்வனாய் நீ - என்றோ
நான் நிம்மதியாய்
உறங்கி கிடந்த வேளையில்
இரகசியமாய் என் மனதை
கொள்ளை அடித்த பிறகு ..!
ஹே.. எனக்கும் கவிதை
வருதே ..!
பிரேம் சத்யா : போதும் பா !
இடத்த காலி பண்ணுங்க !
இந்த பதிவை முடிக்கணும் !
No comments:
Post a Comment