Thursday, April 21, 2011

அவனும் அவளும் 2












அவள் : என்னோடு உனக்கு நேர்ந்த 
காதல் எப்படி ?


அவன் : ஆசீர்வதிக்கப்பட்ட 
மழை நாளில் - கூட்டமில்லாத 
பேருந்தின் ஜன்னல் வழி 
ஈரமாய் வந்து  உரசும்
மெல்லிய தூறலில் 
மொத்தமாய் லயித்து 
கிடைக்கையில்....
செவிப்பறையில் - வெறுமனே 
பட்டு தெறிக்காமல் 
இரகசியமாய் - உயிருக்குள் 
இறங்கி - தேங்கி கிடந்த 
பரவசம் அள்ளி வெளியில் 
எறிந்து விட்டு
அமர்ந்து கொள்ளும்,
ஓட்டுநர் தட்டிவிட்ட 
எதிர்பாராத இளையராஜாவின் 
பாடலாய் ---
உன்மீதான காதல் !
என்றோ "நான்"  
அசந்து இருக்கையில் 
நுழைந்து கொண்டது !

அவள் : போடா ! ஒண்ணுமே 
புரியல !


















அவன் : சரி ! உன்னை எப்படி 
என் காதல் சாய்த்தது ?

அவள் : உன்னோட talent,
நல்லா படிக்கிற, அப்பறம் 
Drawing, இன்னும் நிறைய !

அவன் : ஓகோ !
ஒருவேளை - நீ
வரிசை கட்டி அடுக்கிய 
யாவும் ஒன்று விடாமல் 
ஓடிவிட்டால் ...

அவள் : ஊம் .. ம் ... 
அப்பவும் பிடிக்கும் ! 
ஹேய் ! Now I got your point !
நானும் களவு போன வீடுதான் 
கள்வனாய் நீ - என்றோ 
நான் நிம்மதியாய் 
உறங்கி கிடந்த வேளையில் 
இரகசியமாய் என் மனதை 
கொள்ளை அடித்த பிறகு ..!
ஹே.. எனக்கும் கவிதை 
வருதே ..!

பிரேம் சத்யா : போதும் பா !
இடத்த காலி பண்ணுங்க !
இந்த பதிவை முடிக்கணும் !


No comments: