சீப்பிற்கு
பல் வலியாம்
உன் நீண்ட
கூந்தலில்
பயணித்ததில் ..!
உன் முகம் காட்டும்
போதெல்லாம்
பரவசப் பட்டு
ஒளி கொள்ளும்
கண்ணாடியை விட
நீ முகம் பார்த்துஎன்ன மகிழ்ச்சி
அடைந்து விடபோகிறாய் !
அறையெங்கும்
வெளிச்சம் !
எனக்கோ ஒரு
மயக்கம் !
அந்த மரகத
வெளிச்சம்
ஜன்னலின் வழி
கசிகிறதா ? இல்லை
மஞ்சள் பூசி கொண்ட
நிலவு உன் முகத்தில்
இருந்து வீசுகிறதா?
பட்டு பூச்சிகளை
இம்சித்து நெய்த
புடவைகளை
மடித்து வைத்து விட்டு
வெடித்த பருத்தி
இலவம் கொண்டு
நெய்த புடவை உடுத்தி
நிற்கிறாய் !
எளிமை , அஹிம்சை
என்றெல்லாம்
சொல்வார்களே
இது தானோ அது !
உன் அழகில்
கொஞ்சத்தை - கழுவி
எடுத்து கொண்ட
குவளை நீரும்
ஒற்றி எடுத்து கொண்ட
துண்டும் எனக்குள்
பொறாமை தீ மூட்டி
இளிகின்றன !
ஓவிய குறிப்பு : இது ரவி வர்மாவின் ஓவியம்.
பின் புலம் : மதராச பட்டினதிற்கு முதல் முறையாக
பட்டாம் பூச்சிகளை கட்டிக்கொண்டு , இளங்கலை
கல்லூரியின் ஒரு விடுமுறையில் சென்று இருந்தேன்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு
இருந்த ரவி வர்மாவின் மனம் கவர்ந்த சில ஓவியங்கள்
பதிக்க பட்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி கொண்டேன்.
அதி வீர ராம பட்டினத்து கல்லூரி காலங்களில்
காட்சிகளையும், உணர்சிகளையும் உருட்டி திரட்டி
நான் எதை கிறுக்கினாலும் , தேடி வந்து பாராட்டும்
மாண்புடை தமிழ் பேராசிரியர்கள் எனக்கு
அருளப்பட்ட வரம். அப்படிபட்ட தூண்டுதலில்
அர்வ கோளாறுகளுடன் கிறுக்கியவைகளில்
இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஓவியத்திற்கு பின்புறமும்
பின் புலம் : மதராச பட்டினதிற்கு முதல் முறையாக
பட்டாம் பூச்சிகளை கட்டிக்கொண்டு , இளங்கலை
கல்லூரியின் ஒரு விடுமுறையில் சென்று இருந்தேன்.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விற்பனைக்கு
இருந்த ரவி வர்மாவின் மனம் கவர்ந்த சில ஓவியங்கள்
பதிக்க பட்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி கொண்டேன்.
அதி வீர ராம பட்டினத்து கல்லூரி காலங்களில்
காட்சிகளையும், உணர்சிகளையும் உருட்டி திரட்டி
நான் எதை கிறுக்கினாலும் , தேடி வந்து பாராட்டும்
மாண்புடை தமிழ் பேராசிரியர்கள் எனக்கு
அருளப்பட்ட வரம். அப்படிபட்ட தூண்டுதலில்
அர்வ கோளாறுகளுடன் கிறுக்கியவைகளில்
இதுவும் ஒன்று. ஒவ்வொரு ஓவியத்திற்கு பின்புறமும்
ஓவியம் தொடர்புடைய கவிதைகளை எழுதி கொள்வேன்.
இணையத்தில் மங்கலான படம் தான் கிடைத்தது.
இணையத்தில் மங்கலான படம் தான் கிடைத்தது.
No comments:
Post a Comment