Tuesday, October 26, 2010

என்றோ எழுதி கசங்கியது



ஆதியில் அன்னையை சுற்றி வந்தேன்..!
தந்தையின் தோளில் தொத்தி கொள்வேன் ..!
தாத்தாவை மறக்க முடியுமா ? - அவர்
தலையில் ஏறிக்'கொல்வேன்' ..!
பட்டாம் பூச்சியாய் திரிந்தேன் ..!
ஆம் , வண்ண மலர்கள் கண்களை
மயக்கின--தோழர் கூட்டம்
ஆயிரம் பாடம் புகட்டியது ???


அன்னையின் அன்பை - அவசரகதியில்
பலமுறை கீழே கொட்டி விட்டேன்
தோய்ந்து போன என்
தந்தையின் தோள்களை கவனிக்க
மறந்தேன் ..???
கன்னியின் கடை கண் பார்வைக்காக
காத்து காத்து கிடந்தேன் ..!

கிடைத்தது மின்னல்களும் -அதை
சேமித்து வைக்கும் நுட்பங்களும்
ஒரே காதலை - இருவரும்
அடைகாத்தோம் தனி தனியாக ..!

உறவு சங்கிலியால் பிணைக்கப்பட்டு
அவளும் போனாள் அவள் அத்தானோடு
இதயத்தை கிழிக்காமல் தான் நுழைந்தாள்
போகும் போது அதை செய்து விட்டு போனாள்
திரும்பி பாத்தேன் - என்
அன்னை இன்னும் காதலித்து
கொண்டிருந்தாள் என் முழுமையையும் ...!


தாய் மடியை காட்டிலும் - ஏது உயர்வு ?
இப்போது நான் விடுதியில் ...
எப்போதாவது நான் - விருந்தாளியாய்
வீடு போவேன் ..!

அவளது வேலைகளை இடையுறு செய்து
ஒரு குழந்தையாய் அவள் மடியில்
தலை சாயும் நேரம் ...
ஆகா..! சொல்வதற்கு எந்த மொழியிலும்
வார்த்தை இல்லை ..!

ஈரேழு பிறப்புகள் எடுத்தாலும்
கிடைக்காது எனை பெற்றோர் போல்
ஆடுகின்ற சுதந்திரம் கொடுத்து
ஆட்டுவிக்கும் அதிகாரம் கொடுத்து
ஆனந்தப் படும் அன்பு உள்ளங்கள் ..!
எனக்கடுத்து - எனை சரியாக
புரிந்து கொண்ட ஒரே ஜீவன்கள்..!

என் காதலும் - காதல் பரிசான
கண்ணீரும் அன்னையின் அன்பு
ஓடையில் கலந்திட்ட தருணம்
உணர்வுகளின் உச்சியில்
ஓசைகளின் மௌனத்தில்
திளைத்தேன்..!
வாழ்வு ஓர் இலக்கியம்
இயல்பாய் அமைய வேண்டிய
இலக்கணம் - தெளிந்தேன்

உள்ள துள்ளலோடு தான்
ஒவ்வொரு அடியும் வைக்கின்றேன்
எனினும் வாழ்க்கை பாதையில்
பெருநடை போட்டோர் வழி மறித்து
கேட்டால் ஏனோ திரு திரு வென
விழிக்கின்றேன்-என்
மௌனமும் - பதிலும்
தவறென்று வாதிடுவோர்
முன்னிலையில் என்னதான்
உரைப்பதென்று..!

No comments: