Monday, October 25, 2010

துபாய் அப்பா

தொலை தூர கானல்
தேசம் நீங்கள் இருப்பது ..!
தொலையாத உம நினைவுகளோடு
எத்துனை நாள் தனித்திருப்பது ...!

அப்பா என்று அடுத்த
வீட்டு பிள்ளை முனகிட
ஓடி வருகிறார் அந்த அப்பா ..!

நானோ அம்மாவுடனான என்
சண்டைகளில் ஓயாமல்
அலறுவேன் 'அப்பா! அப்பா!' என்று ..!

என்ன செய்ய - தொலை பேசி
வழி நீ பேசும் போது
அன்னையின் குறைகளை
அடுக்கதான்
முடிகிறது என்னால்..!

எங்கள் மீது கொண்ட
பிரியத்தில் நீங்கள்
பிரிந்து போனீர்கள் ...!

விடுமுறையில்
வரும் போது
சாக்லேட் , பொம்மைகளோடு
உங்கள் விழி ஓரத்தில்
நீங்கள் எடுத்து வரும்
கண்ணீருக்கு எதப்பா விலை ?

நலமோடு வாருங்கள் - எங்களுக்கு
நலம் கொண்டு வாருங்கள் ...!

- பிரியமுடன் உங்கள் பிள்ளை

No comments: