Monday, October 25, 2010

காதல் எனும் தேவதை

தினமும் - என் கனவில்
சிறகுகள் மூடி
உறங்க வைக்கிற
தேவதை நீ

அறிவிப்பே இல்லாத
ஒருநாள் - இசைவாய்
நீ பறந்து வந்த நேரம்

மூடி கிடந்த - என்
ஜன்னலில்
மோதிக் கொண்டாய் ...!

கோபத்தின் உச்சிக்கு
மட்டுமல்ல - வானின்
உச்சிக்கும் போய்
வெண்ணிலவில் வாசம்
கொண்டாய் ...!

அன்றிலிருந்து - திறந்தே
கிடக்கிறது
ஜன்னலும் - என்
விழிகளும் ...!
(உன் வருகைக்காக)

No comments: