Tuesday, August 23, 2011

கண்ணீர் பூவிண்டே கவிலில் தலோடி !



ஒரு காலத்தில் மலையாள பாடல்கள் என்றால் அறுவை என்று இருந்தேன். அது எவ்வளவு பெரிய இழப்பு என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன். தவித்திருக்கும் தனிமை, மரங்கள் நெருங்கி சூழ்ந்த வனப்பு, மழைக் கொட்டி நின்ற ஈரம் வீசும் பொழுதுகள், லேசாக திறந்த சன்னலின் வழி திரண்டு வந்து உடல் சீண்டும் காற்று, இப்படி அடிக்கிக் கொண்டே போகிற மாதிரியான உயிப்பான பாடல்கள் சில கேட்க நேரிட்டது. அழுத்தங்களை ஒதுக்கி வைத்து அந்த பாடல்களுக்குள் மூழ்கிக் கிடந்தது மூர்சையானேன். அதில் ஒன்று இந்த பாடல். தமிழ் நடையும் , சம்ஸ்கிருதம் கலந்த தமிழ் வார்த்தைகளும், மூக்கொலிகளான "ங" மற்றும் "ஞ" இவற்றின் ஓசை நயமும் மனதை வசீகரிப்பவை.


கண்ணீர்  பூவிண்டே  கவிலில் தலோடி
ஈனம்  முழங்கும்  பழம்  பாட்டில்  முங்ஞி 
மறுவாக்கு  கே(ள்)க்கான்  காத்து  நி(ல்)க்காதே ..
பூதும்பி எண்டே  மறஞ்ஞு
எந்தே புல்லோர்க்குடம்  போலே  தேங்ஞி !! (கண்ணீர்  பூவிண்டே )

உன்னிக் கிடாவின்னு   நல்கான்  அம்ம நெஞ்சில்  பாலாழி ஏந்தி
ஆயிரம்  கை நீட்டி  நின்னு  சூர்ய  தாபமாய்  தாதந்தே ஷோகம்
விட  சொல்லவே  நிமிஷங்களில்  ஜலரேககள்   வீணழிஞ்ஞு
கதனங்களில்  துணை ஆகுவான்  வெறுதே ஒருங்குன்ன  மௌனம் ***
தூரே  புல்லோர்க்குடம் கேனுறங்கி .. ( கண்ணீர்  பூவிண்டே)


ஒரு  குஞ்ஞு பாட்டாய் விதும்மீ  மஞ்ஞு  பூஞ்சோலை எந்தோ   திரஞ்ஞு
ஆரேயோ  தேடிப்பிடஞ்ஞு  காட்டும் ஒருபாடு  நாளாய் அலஞ்ஞு 
பூன்தென்னலில் பொன்னோலமாய் ஒரு பாழ்க்கிரீடம் மறஞ்ஞு
கணிவேகுமீ வேண்மேகவும் மழநீர்க் கினாவாய்  மறஞ்ஞு ***
எந்தே புல்லோர்க்குடம்  போலே  விங்கி ( கண்ணீர்  பூவிண்டே)

தமிழில் பல்லவி மட்டும் இப்போது:

கண்ணீர் பூவிட்ட கவியில் நீராடி ..
இதயம் முழுகும் பழம் பாட்டில் ஒழுகி ..
ஒரு வாக்கு கொடுத்தாள்-காற்றில் நில்லாதே
பூந்தும்பி என்றே மறைந்தாள்
எந்தன் உள்ளோர் குடம் சோகம் தேங்க !


இந்த வசீகர பாடகனின் மேலும் சில பாடல்கள் இங்கே :




*** - கிரீடம் மலையாளம் திரைப்படத்தில் இடம்பெற்ற மூலப் பாடலில் 

          இந்த வரிகள் இடம்மாறி வரும்


No comments: