இந்தி பாட்டெல்லாம் அதிகம் கேட்டது இல்லை. மன்னார்குடியில் எங்க அத்தை வீட்டுல கொஞ்சம் , பின் தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் படித்த இரண்டு ஆண்டுகளில் கொஞ்சம் , அப்புறம் எப்போவாது கேட்பது வழக்கம். இங்கு சுவீடனில் மெல்ல கோடை காலம் விலகி
கொண்டு இருக்கிறது. வந்து ஓராண்டுகள் முடியப் போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஐந்தாவது இடத்திற்குமாறி இருக்கிறேன். தங்குமிடம் கிடைப்பது இங்கு சுலபம் அல்ல. ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு தங்க இடம் வாங்கியாச்சு. அருமையான இடம், பச்சை பசேல் என கண்ணைப் பறிக்கும். என் அறைத் தோழனோடு ஒரு சிறு நடை போடலாம் என்று கிளம்பினேன்.அவன் அவனுக்கு தெரிந்த தமிழ் பாடல்களையும் நான் எனக்குத் தெரிந்த இந்தி பாடல்களையும் சொல்லிக் கொண்டே வந்த போது, எங்கோ நினைவின் ஆழத்தில் புதைந்து கிடந்த பீகீ பீகீ ராத்தோம் மேன் - லெஸ்லி லூயிஸ் புது வடிவம் கொடுத்த பழைய இந்தி பாடல் சட்டென்று வெளியில் வந்தது. மழை பெய்து மரங்கள் ஈரம் சொட்டுக் கொண்டிருந்த காட்டுக்குள் மனசு திறக்க , வாய் விட்டு , என் நண்பனின் காது கிழிய பாடினேன். "யுவர் வாய்ஸ் இஸ் வெரி குட் மேன்" என ஒரு போடு போட்டான், என் பன்பலையை சட்டென்று நிறுத்திவிட்டேன். ஆனால் ஸ்ரீநிவாஸ் என்னை சுத்தி அந்த காட்டுக்குள்ள எனக்காக அந்த பாட்டை பாடிகிட்டே இருந்தார். சில நேரத்தில் சில பாடல்கள் என்கிற அனுபவம் எல்லோருக்கும் அப்பப்ப வரும். மறுநாள் நம் தோழர்களிடம் வந்து "அந்த பாட்ட நேத்து ஒரு இருபது தடவ கேட்டுகிட்டே இருந்தேன் டா" அப்படின்னு ஏதோ ஒரு பாட்ட சொல்லிக் கொள்வோம். அது மாதிரி அறைக்கு திரும்பியதும் இந்த பாட்ட இன்னும் கெட்டு கிட்டே இருக்கேன். உங்களுக்கும் புடிச்சா கேளுங்கள். ஒரே ஒரு சினிமா பாட்டாவது எழுதனும் என்று லேசாக ஒரு ஆசை இருப்பதால் இந்த பாட்டுக்கு தமிழ் வரிகள் எழுதி முயற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம் என்று சரணத்தை தொடங்கி விட்டேன். முழுமையாக முடிக்க முடிந்தால் மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.
கொண்டு இருக்கிறது. வந்து ஓராண்டுகள் முடியப் போகிறது. இந்த ஒரு வருடத்தில் ஐந்தாவது இடத்திற்குமாறி இருக்கிறேன். தங்குமிடம் கிடைப்பது இங்கு சுலபம் அல்ல. ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு தங்க இடம் வாங்கியாச்சு. அருமையான இடம், பச்சை பசேல் என கண்ணைப் பறிக்கும். என் அறைத் தோழனோடு ஒரு சிறு நடை போடலாம் என்று கிளம்பினேன்.அவன் அவனுக்கு தெரிந்த தமிழ் பாடல்களையும் நான் எனக்குத் தெரிந்த இந்தி பாடல்களையும் சொல்லிக் கொண்டே வந்த போது, எங்கோ நினைவின் ஆழத்தில் புதைந்து கிடந்த பீகீ பீகீ ராத்தோம் மேன் - லெஸ்லி லூயிஸ் புது வடிவம் கொடுத்த பழைய இந்தி பாடல் சட்டென்று வெளியில் வந்தது. மழை பெய்து மரங்கள் ஈரம் சொட்டுக் கொண்டிருந்த காட்டுக்குள் மனசு திறக்க , வாய் விட்டு , என் நண்பனின் காது கிழிய பாடினேன். "யுவர் வாய்ஸ் இஸ் வெரி குட் மேன்" என ஒரு போடு போட்டான், என் பன்பலையை சட்டென்று நிறுத்திவிட்டேன். ஆனால் ஸ்ரீநிவாஸ் என்னை சுத்தி அந்த காட்டுக்குள்ள எனக்காக அந்த பாட்டை பாடிகிட்டே இருந்தார். சில நேரத்தில் சில பாடல்கள் என்கிற அனுபவம் எல்லோருக்கும் அப்பப்ப வரும். மறுநாள் நம் தோழர்களிடம் வந்து "அந்த பாட்ட நேத்து ஒரு இருபது தடவ கேட்டுகிட்டே இருந்தேன் டா" அப்படின்னு ஏதோ ஒரு பாட்ட சொல்லிக் கொள்வோம். அது மாதிரி அறைக்கு திரும்பியதும் இந்த பாட்ட இன்னும் கெட்டு கிட்டே இருக்கேன். உங்களுக்கும் புடிச்சா கேளுங்கள். ஒரே ஒரு சினிமா பாட்டாவது எழுதனும் என்று லேசாக ஒரு ஆசை இருப்பதால் இந்த பாட்டுக்கு தமிழ் வரிகள் எழுதி முயற்சியை இப்போதே ஆரம்பிக்கலாம் என்று சரணத்தை தொடங்கி விட்டேன். முழுமையாக முடிக்க முடிந்தால் மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.
கிஷோர்: பீகீ பீகீ ராத்தோன் மேன், மீட்டி மீட்டி பாத்தோன் மேன்
ஐசே பர் சாத்தோன் மேன் கேசா லகுதா ஹேய்?
லதா:ஐசா லகுதா ஹேய் தும் பன்கே பாதல் ,
மேரே பதன் கோ பீகோகே முஜ்ஜே ச்சேந்த் ரஹே ஹோ (ஹோ ஒ )
ச்சேந்த் ரஹே ஹோ (2)
லதா: அம்பர் க்கேலே ஹோலி ஊய் மா
பீகி மோரி சோலி ஹம்ஜோலி ஹம்ஜோலி (2)
ஒ பாணி கே இஸ் ரேலே மேன் சாவன் கே இஸ் மேலே மேன்
ச்சட் பே அகேலே மேன்
கேசா லகுதா ஹேய்
கிஷோர் : ஐசா லகுதா ஹேய் தும் பன்கே கட்டா
அப்னே சஜன் கோ பீகோகே க்கேல் க்கேல் ரஹீ ஹோ ஒ
க்கேல் ரஹீ ஹோ
லதா : ஐசா லகுதா ஹேய் தும் பன்கே பாதல் ,
மேரே பதன் கோ பீகோகே முஜ்ஜே ச்சேந்த் ரஹே ஹோ (ஹோ ஒ)
ச்சேந்த் ரஹே ஹோ
கிஷோர் : பர்க்ஹா சே பச்சாலுன் துஜே
சீனே சே லகா லூன்
ஆ ச்சுபாலுன் ஆ ச்சுபாலுன் (2)
ஒ ! தில் நே புக்காரா தேக்ஹோ ருத் கா இஷாரா தேக்ஹோ
உஃப் ஏ நசாரா தேக்ஹோ
கேசா லகுதா ஹேய், போலோ ?
லதா: ஐசா லகுதா ஹேய் குச்ச் ஹோ ஜா(யா)யேகா
மஸ்த் பவன் கே ஏ ஜ்ஜோகே சையான் தேக் ரஹே ஹோ ஒ
தேக் ரஹே ஹோ ஒ
ஐசா லகுதா ஹேய் தும் பன்கே பாதல் ,
மேரே பதன் கோ பீகோகே முஜ்ஜே ச்சேந்த் ரஹே ஹோ ஹோ ஒ
ச்சேந்த் ரஹே ஹோ ...
No comments:
Post a Comment