Thursday, July 14, 2011

ஆமாம் !


"வகுப்புக்கு நடந்தேதான்
போறியா ? " - அன்னையும்
கேட்டாள் மறுமுனையில் !

"இந்த ஊரு காடு அழகு !
அதுக்குள் புகுந்து போகும்
பாதை அழகு !
ஆறு கிலோ மீட்டர் என்ன
அறுபது கிலோ மீட்டர்
நடக்கலாம் - பல்லு போன
கிழவி கூட எனை
முந்தி போகிறாள் அம்மா .. "
இப்படி இது அதுவென்று
அவள் எண்ணங்களை சிதறடித்து
ஆறு நிமிஷம் இழுத்துச் சொன்னேன்
ஆமாம் என்பதை - அவளும்
மறந்தாள் கேள்வியை  !

அவள் தவிப்பையும்
சிதைக்காமல் எடுத்து
வந்த தொலைபேசி
அலைகளுக்கு நன்றி !

                                           தாய்க்கு தலை மகன் ,
                                           பிரேம் சத்யா

No comments: