Monday, December 20, 2010

அம்மா - அன்பின் அடையாளம்

கடவுள் பற்றி ஆயிரம் சர்ச்சைகளும்
குழப்பங்களும் , சண்டைகளும்
காலங்காலமாய் நிகழ்ந்த வண்ணம்
இருந்தாலும் - அன்னையின்
கடவுள் தன்மை பற்றி - அவள்
அன்பின் புனிதம் பற்றி
அணு அளவு சந்தேகம் - உலகின்
எந்த மூலையிலும் எழப்போவதில்லை !

முற்றும் துறந்த முனிவன் கூட - தாயின் தேகம் 
பற்றி எரியபோவதை தாங்க இயலாது 
கண்ணீர் விட்ட உண்மை  கதை உண்டு !
சமீபத்தில் நிகந்த - எனை மிகவும் 
பாதித்த மரணம் - எனக்குள் 
வார்த்தைகள் இல்லை ! - இடைவிடாது 
ஏதாவது சிந்திக்கும் மனசு கூட 
எனக்காக - நான் துயர் மீள 
வேண்டும் என 
மௌனம் கொண்டு நிற்கிறது !
தாய் குருவி ,திரும்பாத ஊர் 
போய்விட்ட நிலையில் - துடிக்கும் 
இந்த பிள்ளை குருவிகள் 
மன சாந்தி கொள்ளட்டும் !

திடீரென வந்து நம் வாழ்வை 
திருடி கொண்டு போகும் 
மரணத்தின் பிடியில் - நாமும் 
தப்பிவிட போவதில்லை ! 
இனி நேரம் ஓட்டி விளையாடி 
பொன்னான வாழ்வதனை 
வீண் செய்யும் போக்கு - நம் 
நினைவிலிருந்தே அழியட்டும் !

கணப்பொழுதில் கனவாய் 
மறைந்து - என் நிஜங்களில் 
ஏற்றுக் கொள்ள முடியாததாய் 
போய்விட்ட -உங்கள் 
இனிய வாழ்வு - என் இதயத்தில் 
புகை மூட்டி - கண்களில் நீர் வார்பதால் 
உங்களுக்கு இரங்கற்பா பாட முடியாது 
இந்த பாவியால் ...
என்றேனும் நான் ஏற்று கொள்கிற 
துணிச்சல் வரும் போது - உங்களை 
போற்றி என்னை புனித படுத்தி கொள்வேன் !
இந்த பாடல்கள் - உடல் துறந்து 
அமரத்துவம் எய்திய அந்த 
ஆன்மாவிற்கு சமர்ப்பணம் ...!






























No comments: