குழப்பங்களும் , சண்டைகளும்
காலங்காலமாய் நிகழ்ந்த வண்ணம்
இருந்தாலும் - அன்னையின்
கடவுள் தன்மை பற்றி - அவள்
அன்பின் புனிதம் பற்றி
அணு அளவு சந்தேகம் - உலகின்
எந்த மூலையிலும் எழப்போவதில்லை !
முற்றும் துறந்த முனிவன் கூட - தாயின் தேகம்
பற்றி எரியபோவதை தாங்க இயலாது
கண்ணீர் விட்ட உண்மை கதை உண்டு !
சமீபத்தில் நிகந்த - எனை மிகவும்
பாதித்த மரணம் - எனக்குள்
வார்த்தைகள் இல்லை ! - இடைவிடாது
ஏதாவது சிந்திக்கும் மனசு கூட
எனக்காக - நான் துயர் மீள
வேண்டும் என
மௌனம் கொண்டு நிற்கிறது !
தாய் குருவி ,திரும்பாத ஊர்
போய்விட்ட நிலையில் - துடிக்கும்
இந்த பிள்ளை குருவிகள்
மன சாந்தி கொள்ளட்டும் !
திடீரென வந்து நம் வாழ்வை
திருடி கொண்டு போகும்
மரணத்தின் பிடியில் - நாமும்
தப்பிவிட போவதில்லை !
இனி நேரம் ஓட்டி விளையாடி
பொன்னான வாழ்வதனை
வீண் செய்யும் போக்கு - நம்
நினைவிலிருந்தே அழியட்டும் !
கணப்பொழுதில் கனவாய்
மறைந்து - என் நிஜங்களில்
ஏற்றுக் கொள்ள முடியாததாய்
போய்விட்ட -உங்கள்
இனிய வாழ்வு - என் இதயத்தில்
புகை மூட்டி - கண்களில் நீர் வார்பதால்
உங்களுக்கு இரங்கற்பா பாட முடியாது
இந்த பாவியால் ...
என்றேனும் நான் ஏற்று கொள்கிற
துணிச்சல் வரும் போது - உங்களை
போற்றி என்னை புனித படுத்தி கொள்வேன் !
இந்த பாடல்கள் - உடல் துறந்து
அமரத்துவம் எய்திய அந்த
ஆன்மாவிற்கு சமர்ப்பணம் ...!
No comments:
Post a Comment