சிறு உரசல் போதும்
தீக்குச்சி பற்றிக்கொள்ளும் ..!
கையளவு நெய் போதும்
மணிக்கணக்கில் - திரிகள்
சுடர் விடும் ..!
அழகு மணி விளக்குகள்
கோர்த்து வைத்தால்
வீடே ஒளி கொள்ளும் ..!
வாழ்வும் இது போலத்தான்
இன்று கூட நீ தோய்ந்து
கிடக்கலாம் - என்றேனும்
நிச்சயம் உரச படுவாய்..!
உன் இதயத்தில் - குழி
விழுந்த இடங்களில்
நம்பிக்கை ஊற்றி வை
ஆயத்தமாய் ..!
இந்த சின்ன அகத் தீயில்
குளிர் காய கற்று கொண்டால்
அணையாத உயிர் சுடர்
தேடும் தாகம் கொள்வாய் ..!
தீமைகளை தீர்த்து
விட்டதாய் - இருளை
கொளுத்தி கொண்டாடும்
வெற்றி திருநாள்
இந்த தீபத் திருநாள் ..!
வரட்டும் திரு நாள்
வருடம் ஒருநாள் ! - நீ
ஒரே ஒரு முறை
அவதாரம் எடு - உனக்குள்
வெளிச்சம் விழுங்கி
கிடக்கும் சூரர்களை
வேட்டையாடு ..!
எல்லா நாளும்
திருநாள் இனி
உனைக் கண்டால்
ஓடிடும் சனி ..!
No comments:
Post a Comment